Sunday, February 15, 2015

இரயில் புன்னகை.



1982-84ல் வெளியான 8 கதைகளின் தொகுப்பு.

”கச்சேரிக்கிடையே என்னத்த வாயில போட்டுக்கிறாருன்னு போயி பாத்திட்டு வா” அரியக்குடியின் தோடியில் லயிக்காமல் அவரின் தொண்டையில் கவனம் குவித்த சுஜாதாவின் மாமா, தன்னுடைய தொல்காப்பிய மேற்கோள்களை புறந்தள்ளி மூச்சிரைப்பை முக்கியமாக்கிய எழுத்தாள நண்பர் என தனக்கேயுரிய நகைச்சுவை பாணியில் ஆரம்பிக்கிறது அவதானிப்பு பற்றிய சுஜாதாவின் முன்னுரை,

முதல் கதை “இரயில் புன்னகை”. தமிழக இளைஞனொருவன் பம்பாயின் ஜனத்திரலில் மெற்க்கொள்ளும் ஒரு ரயில் பயணம், சற்றுமுன் பார்த்து புன்னகைத்த அந்த தமிழ் முகம் தண்டவாளத்தில் சடமாய் கிடக்க, அலைகழிக்கும் அன்றாடத்தை நொந்தபடி முன்னிட்டு அலுவலகம் செல்லும் சாமிநாதன் கதாபாத்திரம். மனம்பொறுக்காமல் இறந்தவனின் வீடு நோக்கி விரையும் சாமி, இறந்தவனின் வீடு எப்படியும் இன்னும் சில நாட்களில் காலியாகிவிடும் சந்தோசத்தில் அடுத்த ஆள் தேட ஆரம்பிக்கும் அபார்ட்மெண்ட் மேனேஜர். “இறந்தவனுக்கும் உனக்கும் என்ன உறவு?” மேனேஜரின் கேள்விக்கு புன்னகையை பதிலாக தரும் சாமிநாதன்.

குதிரை கடித்ததால் கிருஷ்ணசாமி ”குதிரை கிச்சாமி” ஆகும் ”குதிரை” கதை.

150 பிராங்க் காட்டன் சட்டையைவிட சல்லிசாக 250ரூவாய்க்கு விழுப்புரத்தில் வாங்கிவந்த ”பாரீஸ் தமிழ்பெண்” பெண்குழந்தை.

ஊர்தோரும் தேதிவாரியாக விஜயம் செய்யும் டாக்டர் ராஜ், அவரை பேட்டி காண குறுக்குவழியில் செல்லும் நிருபர். லேகியத்தை வாழ்க்கைக்காக வரித்துக்கொண்டிருந்தாலும் M.A இங்கிலீஷ் படிச்சதையும், இயற்க்கை வைத்தியத்துக்கு தூதுளங்கொடி தேடியலைந்ததையும் ”முழு வைத்தியன்” கதையில் அசுரத்தையாய் விவரிக்கும் டாக்டர் ராஜ்.

”அரை வைத்தியன் ” கதையில் தொழில்தர்மம் பேசும் டாக்டர் சீனிவாசராவ்.

பாதியில் நிறுத்த மனசில்லாமல் பல ஸ்டாப்பிங் தாண்டி இறங்க வைத்த புத்தகம்...


இரயில் புன்னகை.
சுஜாதா.
விசா பப்ளிகேஷன்ஸ்..
ரூ.45.

0 comments:

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Post a Comment