Sunday, February 15, 2015

சஞ்சாரம்.



ஆவணப்படமாகவோ, ஆராய்ச்சிக்கட்டுரையாகவோ வந்திருக்க வேண்டிய கரு. தன்னுடைய களப்பணியினாலும், தேணுகா, பி.யெம் சுந்தரம் முதலிய இசை விமர்சகர்கள் வழி திரட்டிய தகவல்கள் மூலம் ஒருங்கிணைந்த தஞ்சை ஜில்லாவின் கலைஞருக்கு இயல்பாய் கிடைக்கும் மரியாதையும் கவுரவமும் கரிசல்மண்ணின் கலைஞர்களுக்கு மறுக்கப்படுவதையும் அவர்கள் உதாசீனப்படுத்தப்படுவதையும் கொஞ்சம் அதிகமான புனைவுகள் சேர்த்து நாவலாக்கியிருக்குறார் எஸ்.ரா.


பக்கிரி, ரத்தினம். கரிசல்மண்ணின் நாதஸ்வர கலைஞர்கள். கோவில் திருவிழாவிற்க்கு வாசிக்க செல்லும் இவர்கள், முதல்மரியாதை சம்பந்தமாக இரு ஊர்காரர்களுக்கிடையே ஏற்படும் தகறாரில் இழிவாக நடத்தப்படுகிறார்கள். ஆத்திரப்படும் பக்கிரி கோவில் பந்தலை தீ வைக்க, பக்கிரியும் ரத்தினமும் ஊர் ஊராக தலைமறைவு வாழ்கிறார்கள்.

பக்கிரியின் நினைவலைகளில் நாதஸ்வரம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த காலத்திலிருந்து நிகழ்காலம் வரை நாவல் விரிகிறது. ஆங்காங்கே நிறைய கிளைக்கதைகள். ஒரு கட்டத்தில் இந்த கிளைக்கதைகள் அசுவாரஸ்யமாக பக்கங்களை நிரப்புகின்றன.

கரிசல்மண்ணின் வாத்திய கலைஞர்களின் ஆதங்கங்களை பதிவுசெய்திருக்கும் வகையில் இந்நாவல் முக்கியத்தும் பெறுகிறது.


சஞ்சாரம்.
எஸ்.ராமகிருஷ்ணன்.
உயிர்மை பதிப்பகம்.
ரூ.370.

0 comments:

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Post a Comment